Wednesday, March 10, 2010

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் .

கணிதம் , தத்துவம் இரண்டிலும் உச்ச கட்டப் புகழ் பெற்றிருந்த மேதை பெர்ட்ராண்ட் ரஸ்ஸலை ஆர். கே. லட்சுமணன் சென்று சந்தித்தபோது , மணிக்கணக்கில் பேசினார் . அவர் , " எந்த ஒரு கருத்தையும் எடுத்துச் சொல்வதற்குச் சிறுகதைதான் தகுந்த உத்தி " என்ற ரஸ்ஸல் , நிறைய உதாரணங்களைச் சொல்லி விளக்கினார் . விடைபெறும்போது , " இந்தியர்களான நீங்கள் கண்டுபிடித்தது நத்திங் ! நத்திங் !" என்றார் . லட்சுமணுக்கு முகம் சிவந்து போயிற்று . " இல்லை சார் , அப்படிச் சொல்லிவிட முடியாது . உதாரணமாகக் , செஸ் ஆட்டம் ..." என்று லட்சுமண் தட்டுத் தடுமாறி ஏதோ சமாதானமாகக் கூற முயன்ற போது , கண்களில் குறும்பு கொப்பளிக்க , " இந்தியர்கள் கண்டுபிடித்தது நத்திங் ! அதாவது நத்திங் என்ர கோட்பாட்டையும் அதன் வரிவடிவமான பூஜ்யத்தையும் நீங்கள்தான் கண்டுபித்தீர்கள் . கணிதத்தின் மாபெரும் கண்டுபிடிப்பல்லவா அது !" என்றாராம் அந்தப் பொல்லாத மனிதர் .
--- பொக்கிஷம் , ஆனந்தவிகடன் . 28 - 10 - 2009 .

No comments: