Monday, March 8, 2010

' சிலிகான் இம்ப்ளான்ட்'

' சிலிகான் இம்ப்ளான்ட்' செய்துகொண்டவர்களுக்குப் பால் ஊறுவதில் பிரச்னை உண்டா ? குழந்தை பால் அருந்துவதில் சிரமம் ஏற்படுமா ?
இம்ப்ளான்ட் ( செயற்கையாக மார்பகத்தைப் பெரிதாக்குவது ) என்பது மேலெழுந்தவாரியாகச் செய்யப்படுவது . நதிகளைப் போல பாலின் உற்பத்தி ஸ்தலம் இருப்பது மார்பகத்துக்கு உட்பகுதியில் ! ஆகவே , பிரச்னை இருக்காது . கர்ப்பமுற்ற பெண்ணின் மார்பகத்துக்கு உள்ளே ' வியர்வைச் சுரப்பிகள் ' உண்டு . ஒரே வித்தியாசம் , அவை சுரப்பது பால் ! கர்ப்பம் தரித்த பிறகு , காம்புக்கு ( nipple ) நேர் பின்னால் உள்ள இந்தச் சுரப்பிகள் சற்றுப் பெரிதாகும் . இப்படிச் சுரக்கும் பால் மெல்லிய குழாய்கள் மூலம் குட்டிக் குட்டி கோடவுன்களுக்கு வந்து சேர்கிறது .இந்த Storage Space - க்கு Sinuses என்று பெயர் . அங்கேயிருந்து மினி ' டியூப் ' கள் மூலம் பால் ஒவ்வொரு காம்பின் நுனிக்கும் வந்து சேர்கிறது . பிறந்தவுடனே குழந்தை அதை நுகர்ந்து தெரிந்துகொண்டு உறிஞ்சுவதுதான் ஆச்சர்யம் ! ' இம்ப்ளான்ட் ', தோலுக்கு ஜஸ்ட் உள்ளே பொருத்தப்படுவது . இதனால் , மார்பகத்தின் மென்மை சற்று மாறும்தான் ! இயற்கையான மார்பகத்தில் பால் குடித்த குழந்தையை இம்ப்ளான்ட் மார்பகத்துக்கு மாற்றினாலும்....பால் கிடைக்கும் . ஆனால் , இது என்ன ... அவ்வளவு மிருதுவாக இல்லாமல் , ஒரு மாதிரியாக இருக்கிறதே ?! ' என்று குழந்தை சற்று வித்தியாசமாக உணரக்கூடும் ! .
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் 28 - 10 - 2009 .

No comments: