Saturday, March 6, 2010

சாதி மறுப்பு .

அன்றைய வைதீக மதத்திற்கு -- அதாவது இன்றைய இந்து மதத்திற்கு சாதி என்பது ஒரு மாற்றமுடியாத அங்கமாகவும் , அடையாளமாகவும் விளங்குகிறது . வர்ணாசிரம தர்மம் என்பது , வைதீகத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட அம்சமாகும் . அது சமுதாயத்தின் அடித்தளம்வரை ஆழமாக வேரூன்றியுள்ள சாபக்கேடாகவே தொடர்கிறது . சாதி இல்லாமல் இந்துமதம் இருக்கமுடியாது . இந்துவாகப் பிறந்த எவனும் சாதி என்ற வட்டத்தை -- அந்தப் பிறவி முத்திரையை , எளிதில் புறந்தள்ள முடியாது . பிறக்கும்போதே உயர்ந்தசாதி -- தாழ்ந்தசாதி என்ற வேற்றுமைச் சின்னத்தைச் சுமந்தபடிதான் வாழ்க்கைப் பந்தயம் தொடங்குகிறது . உலகப்பந்தின் எந்தப் பகுதியிலும் , எந்த மதத்திலும் இல்லாத கொடுமையான சமூகப் பாகுபாடு இது . ' பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் ' என்று , பிற்போக்கு சக்திகளின் பிடரியில் அறைந்த வள்ளுவனின் கால்பதித்த தமிழ்மண்னை , சாதிகளால் கூறுபோட்டன சனாதன வியூகங்கள் . அந்த சாதிப் பிரிவுகளுக்கும் , தீண்டாமைக் கொடுமைகளுக்கும் எதிராக ஓங்கிக்குரல் கொடுத்து , சமூகநீதிக்கு அடிக்கல் நாட்டியவர்கள் தமிழகச் சித்தர்கள் .
--- சித்தர்களின் வைதீக மறுப்பு , என்ற கட்டுரையில் நந்தா . குமுதம் தீராநதி , செப்டம்பர் . 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: