Wednesday, March 3, 2010

குறிக்கோள் .

ஒரு தீவில் ஒரு வழக்கம் இருந்தது . யார் வேண்டுமானாலும் அரசர் ஆகலாம் . ஆனால் , ஐந்தாண்டுகள் மட்டுமே ஆட்சி செய்யமுடியும் . பிறகு , அருகில் உள்ள இன்னொரு தீவில் அவரைத் தூக்கி எறிந்து விடுவார்கள் . அங்குள்ள கொடிய விலங்குகள் அவரைக் கொன்று தின்றுவிடும் . பல ஆண்டுகளாக இந்தப்பழக்கம் இருந்தது . இந்தமுறை ஓர் இளஞன் அரசனானான் . சிறப்பாக ஆட்சி செய்தான் . ஐந்தாண்டுகள் முடிந்தன . அவனை அடுத்த தீவில் கொண்டு தள்ளிவிடப் படகில் அழைத்துப் போனார்கள் .
ஆனால் , என்ன ஆச்சர்யம் ! அந்தத் தீவில் மனிதர்கள் பலர் இருந்து அவனை வரவேற்றார்கள் . உண்மையில் நடந்தது என்ன தெரியுமா ? இந்த்த் தீவை ஆண்டுகொண்டிருந்தபோதே மறைமுகமாக சில படை வீரர்களை அங்கே அனுப்பி மிருகங்களைக் கொன்றான் . காடுகளையெல்லாம் செம்மைப் படுத்தினான் . வீடுகளை உருவாக்கினான் . குடும்பங்களைக் குடி பெயரச் செய்தான் . இப்போது இன்னொரு நாடு உருவாகிவிட்டது . இப்போது இரண்டு நாடுகளுக்கும் இவனே தலைவன் .
இதனைக் குறியீடாக வைத்துக் கொண்டு குறிக்கோளை அடையலாம் ; சாதனை படைக்கலாம் .
---இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் , ஆகஸ்ட் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: