Tuesday, March 2, 2010

அறிவுக் களஞ்சியம் .

* பெங்களூர் நகர் கெம்பே கௌடாவினால் 1537 -ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது . அங்கே தான் 1905 ல் முதல் மின்சார பல்பு எரிந்தது . இன்று அதன் மக்கள் தொகை 53 லட்சம் .
* ஸ்வீகாரம் ( தத்து ) எடுக்கப்பட்ட குழந்தைக்கு ( ஆண் அல்லது பெண் ) புதிய குடும்பத்தில் சகல உரிமைகளும் உண்டு . சென்னை உயர்நீதி மன்றம் விளக்கம் .
* பூமியின் சராசரி உஷ்ணம் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட நோயால் 30 ஆயிரம் மக்கள் இறப்பார்கள் -- ஆராய்ச்சி கருத்து .
* ஆசியா , ஐரோப்பா ஆகிய 2 கண்டங்களை இணைத்து வரும் ஒரே நகரம் இஸ்டான்புல் ( துருக்கி ) தான் போஸ்போரஸ் கால்வாய் நகரின் மத்தியில் ஓடுகிறது .
* திரு . என். டி. சுந்தரவடிவேலு அவர்கள் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தின் தலைசிறந்த பொதுக்
கல்வி இயக்குனராக பணியாற்றியபோது அவர் ஒருவரே இயக்குனராக விளங்கினார் . இன்று 12 இயக்குனர்கள்
அவர் செய்த பணிகளை நிர்வகிக்கிறார்கள் .
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம் ஒரு பூகம்பத்தின் விளைவுகளையும் தாங்கிக் கொண்டு
நிலையாக இருக்கக்கூடிய வல்லமை பெற்றதென ஆராய்ச்சி நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள் .
* இந்தியாவை மூன்று பக்கமும் சூழ்ந்துள்ள கடற்கரை ஓரத்தின் மொத்த நீளம் 7516 கிலோமீட்டர்கள் .
--- வி . கார்த்திகேயன் . அருட்செல்வர் சேக்கிழார் , அக்டோபர், நவம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: