Wednesday, February 24, 2010

இங்கிலீஷ் தெரியாது !

ஒரு தேசத்தின் மொழியை அறியாதவர் அந்த தேசத்தை ஆளமுடியுமா ? படையெடுத்து ஆக்ரமித்தவர்கள் தவிர்த்து , இதர சந்தர்ப்பங்களிலும் வரலாற்றில் இப்படி நேர்ந்ததுண்டு . 1714 - ம் ஆண்டில் இங்கிலாந்தில் முடிசூட்டிக்கொண்ட முதலாம் ஜார்ஜ் மன்னருக்கு சுத்தமாக இங்கிலீஷ் தெரியாது . ஜெர்மனியில் பிறந்த அவர் , பெண்வழி வாரிசாக இங்கிலாந்தை ஆளும் உரிமை பெற்றவர் . ஜெர்மன் , பிரெஞ்ச் , லத்தீன் என பல மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும் , பதவி ஏற்றபோது அவருக்கு ஆங்கிலம் ஆப்சென்ட் . இதனாலேயே அவரை லாயக்கற்ற மன்னராக வர்ணித்த நிர்வாகிகள் உண்டு . காலப்போக்கில் ஆங்கிலத்தில் பேசவும் , எழுதவும் கற்றுக்கொண்டார் அவர் .
--- தினகரன் தீபாவளி மலர் . 2009 .

No comments: