Thursday, February 4, 2010

காந்திஜியும் , சாஸ்திரியும் !

மகாத்மா காந்திக்கும் , லால்பகதூர் சாஸ்திரிக்கும் பிறப்பிலும் இறப்பிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது . இருவரும் பிறந்தது அக்டோபர் 2 - ம் தேதி . இருவரும் இறந்தது பகுள பஞ்சமி தினத்தன்று . அதாவது தியாகப் பிரும்மம் மறைந்த புனித நாள் அது .
இவர்களுடைய மரணத்தில் மற்றொரு ஒற்றுமையும் காணலாம் . காந்திஜி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக உயிர்த் தியாகம் செய்தார் . சாஸ்திரியோ இந்திய - பாகிஸ்தான் ஒற்றுமைக்காக அல்லும் பகலும் உழைத்து உயிர் துறந்தார் . துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மண்ணில் சாய்ந்தபோது மகாத்மா கூறிய ' ஹரே ராம் ' என்ற வார்த்தைகளையே சாஸ்திரியும் உயிர் பிரியும்போது கூறினார் .
--- ஆனந்தவிகடன் . 23 - 01 - 1966 .

No comments: