Wednesday, February 3, 2010

எவரெஸ்ட் !

எவரெஸ்ட் , எவரெஸ்ட் என்று உலகமே கொண்டாடினாலும் நேபாள மக்கள் மட்டும் அதை எவரெஸ்ட் என்று அழைக்க மாட்டார்கள் . ஆமாம் . அவர்கள் ' சாகர் மாதா ' என்றுதான் அதனை அழைக்கிறார்கள் . கடல் அன்னை . அதாவது கடல் போல் பெரிய மலை ! சகர மகாராஜா தவம் செய்த இடம் என்பதாலும் இந்தப் பெயர் வந்திருக்கலாம் .
எவரெஸ்ட் என்று யாராவது சொன்னாலே நேபாளிகள் வெறுப்பாகப் பார்க்கிறார்கள் . ஏன் ?
இந்த மலைச் சிகரத்தை ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற பிரிட்டிஷ் அதிகாரிதான் அளந்து உலகிலேயே உயர்ந்த சிகரம் என்பதைக் கண்டுபிடித்தார் . அதனால் இந்தச் சிகரத்திற்கு வெள்ளைக்காரர்கள் அவரது பெயரையே சூட்டிவிட்டுப் போய் விட்டார்கள் .
காலம் காலமாய் இருக்கும் மலையின் உயரத்தை அளந்த சர்வேயரின் பெயரைப் போய் , அந்த மலைக்கே வைப்பது என்ன நியாயம் ? சாகர் மாதாதான் சரியான பெயர் என்று எனக்கும் தோன்றியது .
--- ப்ரியா கல்யாணராமன் . குமுதம் . 07 - 10 - 2009 .
நேபாளத்தில் இருக்கிறது எவரெஸ்ட் சிகரம் . இது , ஆண்டுதோறும் 7 சென்டிமீட்டர் வீதம் சீனாவை நோக்கி நகர்ந்து செல்வதாக இப்போது கண்டுபிடித்துள்ளனர் .
--- தினமலர் , அக்டோபர் 2 . 2009 .

No comments: