Friday, January 29, 2010

முத்துசாமி தீட்சிதர் .

முத்துசாமி தீட்சிதர் 1835 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வழக்கம்போல பூஜைகளைச் செய்தார் . பூஜை வேளையில் தன்னுடைய சீடர்களைப் பாடச்செய்தார் . அன்று அவர்கள் பாடியது தீட்சிதர் இயற்றிய கமகப்பிரியா -- பூர்விகல்யாணி -- ராகக் கீர்த்தனையான மீனாக்ஷி மே முதம் என்ற உருப்படியை . சரணத்தில் வரும் ' மீனலோசனி பாசமோசனி ' என்ற வரியைச் சீடர்கள் பாடிக்கொண்டிருக்கும்போது ' சிவ பாஹி ' என்று உச்சரித்தார் தீட்சிதர் . இந்த உலகத்தில் அவர் கடைசியாக உச்சரித்த வார்த்தைகள் அவைதாம் .
--- என் . வெங்கடேசன் , ஆஸ்திரேலியா . காலச்சுவடு . செப்டம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: