Sunday, January 24, 2010

ஸ்பூன் எதற்கு ?

ஒரு சமயம் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் , நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்திற்கு சென்றனர் . விருந்து பரிமாறப்பட்டது . ராதாகிருஷ்ணன் கையை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொண்டு வந்தார் . சர்ச்சில் ஸ்பூனை வைத்துக்க்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க , ராதாகிருஷ்ணன் கைகளால் சாப்பிட ஆரம்பித்தார் . ஸ்பூனால் சாப்பிடுங்கள் அதுதான் சுத்தம் ; ஆரோக்கியம் என்றார் சர்ச்சில் . இல்லை , கைதான் சுத்தம் . ஏனென்றால் என் கையை நான் மட்டுமே பயன்படுத்த முடியும் . அதனால் கைதான் சுத்தம் என்றாராம் .
சிசேரியன் .
இப்போதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு குழந்தை சிசேரியன் முறையில்தான் பிறக்கிறது . புகழ் பெற்ற ரோமாபுரி தளபதி ஜூலியஸ் சீஸர் , இப்படித்தான் பிறந்தாராம் ! எனவே , அவரது பெயரையே இம்முறைக்கு வைத்துவிட்டார்களாம் ! ஒரு விஷயம் தெரியுமா ? சிசேரியனில் பிறக்கும் குழந்தை நார்மல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் , புத்திசாலியாக இருக்கிறதாம் ! அதேநேரம் , நார்மல் முறையில் பிறக்கும் குழந்தை தனது தாய் - தந்தையிடம் காட்டும் அன்பு பரிவு பாசத்தைவிட சிசேரியனில் பிறக்கும் குழந்தை குறைவாகவே தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறது ஆய்வு
--- தினமலர் , வாரமலர் . செப்டம்பர் 20 2009 ..

2 comments:

cheena (சீனா) said...

கேள்விப்படாத தகவல்கள் நன்று

பகிர்ந்தமைக்கு நன்றி

க. சந்தானம் said...

அன்பு Cheena ( சீனா ) அவர்களுக்கு, கேள்விப்படாத தகவல்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் மிகுந்த நன்றி !