Monday, January 18, 2010

பாரதியே !

பாரதியே ! மீண்டும் நீயே வருக !
பாரதியின் ஆசை , கனவு , கவிதை , காதல் , கடமை , கண்ணியம் எல்லாமே அவர் எழுத்து மூலம் நமக்குக் கிடைத்த பெரும் வரங்களாகும் . இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே போதும் . நாம் நம்மையும் நம் நாட்டையும் சீர்படுத்தலாம் . அவர் எத்தனையோ கவிதைகளை நமக்கு அளித்து நாமும் பேரின்பம் பெற்றிருக்கிறோம் . அவரைப் போற்றிப் பாராட்டி நாம் ஒரு கவிதையைச் சமர்ப்பணம் செய்வோமா ?
மகாகவியே
உன் கவிதைகளைப் படிக்க - அவை தேனாக இனிக்க -
பெரும் இன்பத்தை அளிக்க - அதில் என்மனம் திளைக்க -
இனி உன்னைப்போல் இருக்க - அது இயலாமல் தவிக்க -
மனம் உன்னையே அழைக்க - இந்த உலகம் செழிக்க -
நீயே மீண்டும் பிறக்க - இறையருள் வேண்டுகிறேன் .
--- சாதனா ராதாகிருஷ்ணன் , இலக்கியப்பீடம் , செப்டம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: