Tuesday, December 22, 2009

தமாஷ் !

ஒரு வெள்ளைக்காரனிடம் பரிசாரகன் வேலை பார்த்திருந்த மந்தோனியின் நாய் இறந்துபோனதற்கு அவன் வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தான் .
நண்பன் : நாய் இறந்துபோனதைக் குறித்தா இவ்வளவு விசனப்படுகிறாய் ?
மந்தோனி : அது இறந்ததைப் பற்றி விசனிக்கவில்லை . இப்போது ஒரு வேலை அதிகமாயிற்றே என்பதற்காகத்தான் விசனப்படுகிறேன் .
நண்பன் : என்ன வேலை அதிகமாய்விட்டது ?
மந்தோனி : துரை சாப்பிட்ட பின் , பிளேட்களை அந்த நாய் சுத்தமாக நக்கி வைத்துவிடும் . இப்போது அவைகளையெல்லாம் கழுவித் துலக்கவேண்டிய வேலை ஒன்று எனக்கு அதிகமாயிற்றே !
--- காலப்பெட்டகம் , ஆனந்தவிகடன் 1929 .

No comments: