Tuesday, December 15, 2009

பிராணாயாமம் .

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு ; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு , நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம் . மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம் .... இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம் .
நமது நுரையீரலில் வலது , இடது என இரு பகுதிகள் . வலது நுரையீரலில் 3 பகுதிகள் , இடது நுரையீரலில் 2 பகுதிகள் . நுரையீரல் ஸ்பாஞ் போல காற்றுப் பைகளால் ஆனது . வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது , வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க ' பிராணா ' சக்தி சீராகப் பரவுகிறது .
இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , ' சந்திரகலை '. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , ' சூரியகலை '. இது வெப்பமானது .
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான ' சந்திரகலை ' அதிகரிக்கும் . இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும் . விஷ்ணுவின் ' அனந்தசயன ' காட்சியில் பொதிந்துள்ள அறிவியல் உண்மை இதுதான் !.
--- பூஜ்யா , தினமலர் . பக்திமலர் . ஆகஸ்ட் 6 . 2009 .

No comments: