Thursday, December 3, 2009

மரம் - 1 , இலைகள்விதம் 5 .

பஞ்ச பாண்டவர்கள் மீண்டும் தங்களுக்கு பதவி வேண்டி பூஜை செய்த தலம் என்பதால் ' ஐவர் பாடி ' என்றழைக்கப்பட்ட பெயர் மருவி இப்போது அய்யாவாடியாக அழைக்கப்படுகிறது . கும்பகோண்த்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர் . இங்குள்ள தர்ம சம்வர்த்தினி அம்பாள் சமேத அகத்தீஸ்வர சுவாமி கோயிலின் வடக்கு பிரகாரத்தில் மகா பிரத்யங்கராதேவி அதர்வன காளியாக அருள்பாலிக்கிறாள் . இழந்த பதவியையும் , சிறப்பையும் மீண்டும் பெற இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் அனைத்தும் மீண்டும் கிடைத்து விடும் என்பது நம்பிக்கை. 18 சித்தர்களும் இங்கு வந்து பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது .
இக்கோயிலின் தலவிருட்சம் ஆலமரம் . இம்மரத்தில் உள்ள ஒவ்வொரு இலைக் கொத்திலும் 5 இலைகள் உள்ளன.
ஒவ்வொரு இலையும் வெவ்வேறு வடிவத்தில் உள்ளன . அதில் ஆல் , அரசு , புரசு , இச்சி , மா என்ற 5 வடிவங்களில் இலைகள் இருக்கின்றன . வேறு எந்த தலத்திலும் இதுபோன்று வெவ்வேறு வடிவ இலைகள் ஒரே மரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் , 27 - 07 - 2009 .

No comments: