Wednesday, November 25, 2009

தெரிந்து கொள்வோம் .

* வால்பாறையிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள ' சின்னக்கல்லாறு ' புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் . ' தமிழகத்தின் சிரபுஞ்சி ' என்றே அழைக்கப்படுகிறது . இதுதான் உலகில் அதிக மழை பெய்யும் இடங்களில் இரண்டாவதாகும் . அங்கிருந்து சோலையாறு பக்கம் . ஆசியாவின் மிக ஆழமான இரண்டாவது அணை இதுதான் .
* ஓர் ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து ( அ ) ஒரு பெண் ஓர் ஆணைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவது போலவே , ஓர் ஆண் இன்னோர் ஆணைப் பார்த்து ( அ ) ஒரு பெண் இன்னோர் பெண்ணைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவதும் இயல்பானதே .
* இருபால் சேர்க்கையாளர் ( Hetro Sexuals ) போலவேதான் ஓரினச் சேர்க்கையாளர்களையும் ( Homo Sexuals ) கருத வேண்டும் .
* ' உலகம் முழுதுமே இருபால் சேர்க்கையாளர்களால் தான் ஹெ.ஐ.வி. அதிகமாகப் பரவுகிறது . ஓரின சேர்க்கையாளர்களால் அல்ல ' என்கிறது ஓர் ஆய்வு
* குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வியை அவர்கள் அறிந்த விஷயங்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள் .
* நினைவாற்றலைப் பயன்படுத்திச் செய்யும் கலைகளில் மிக முக்கியமானது அவதானம் . கவனகம் என்றும் சொல்வார்கள் .
* ஒரு நபர் ஒரு நேரத்தில் 10 விஷயங்களைச் செய்து காட்டினால் அவர் தசாவதானி . சோடஷாவதானம் என்றால் 32 விஷயங்களைச் செய்து காட்டுவது . 100 விஷயங்களைச் செய்து காட்டினால் அதன் பெயர் தசாவதானம் .

No comments: