Saturday, November 21, 2009

அப்படியா ?

* வானில் சப்தரிஷி மண்டலம் தென்படுவதாகக் கூறுவார்கள் . சப்தரிஷிகளின் பெயர்கள் : அத்திரி , வசிஷ்டர் , கௌதமர் , காஸிபர் , விஸ்வாமித்திரர் , பரத்வாஜர் , ஜமத்கனி . ,
* சட்டையைக் கண்டுபிடித்தவர்கள் எகிப்து நாட்டவர்கள் .
* நமது உடலில் அதிக அளவாக 115.7 பாரன்ஹீட் டிகிரி வெப்பத்தையும் , குறைந்த அளவாக 60.8 பாரன்ஹீட் டிகிரி வெப்பத்தையும் தாங்கக்கூடியது .
* ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் 100 சைபர்கள் கொண்ட எண்ணுக்கு கூகால் என்று பெயர் .
* நாம் சமைத்து உண்ணும் அரிசியில் மட்டும் 60,000 ரகங்கள் இருப்பதாக ஐ . நா , சபையின் விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது .
* மனைவி இறந்ததும் மறுமணம் செய்து கொள்வது மனிதர்கள் வழக்கம் . ஆனால் , தன்னோடு வாழ்ந்த பெண் நரி இறந்துவிட்டால் ஆண் நரி வேறு பெண் நரியைத் தேடிப் போகாதாம் .
* நாயின் மூக்கில் வாசனையை உணர்வதற்காக மொத்தம் 22 கோடி செல்கள் உள்ளனவாம் .
* உலகிலேயே பெருமளவு உற்பத்தி செய்யப்படும் தானியம் ' சோளம் ' ஒன்றுதான் .
* அடைகாக்கும் கோழி , முட்டை கூட்டுக்குள் மஞ்சள் கரு உடையாமல் இருக்க , ஒருநாளில் 50 முறையாவது முட்டைகளை திருப்புகிறதாம் .
* செம்மறியாட்டின் குடல் தசை நார்களிலிருந்து தயாரிக்கப்படும் வலுவான நூல் போன்ற நரம்புக்கு கேட் - கட் என்று பெயர் . அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்த நூலினால் தான் தையல் போடுவர் .
* ஒரு துளி ரத்தம் மனித உடலை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் 2 வினாடிகள்.
* இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தியை அறிவித்த வானொலி அறிவிப்பாளர் பூர்ணம் விஸ்வநாதன்
* உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் கரையான் .
* வயலின் இசையை தினமும் தொடர்ந்து சில மணி நேரங்கள் கேட்டு வந்தால் , தலைமுடி நீளமாக வளர்கின்றது என்று ஜெர்மானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
* ஆபிரஹாம் லிங்கனுக்கு 2 2 வயதில் ஆன் என்ற பெண்ணிடம் காதல் வந்தது . ஆனுக்கு 22 வயதானபோது டைபாய்டு காய்ச்சலில் இறந்து போனாள் . ஆன் கல்லறையில, " உறவினால் அல்ல , பிரிவினால் மணந்த ஆன் இங்கே உறங்குகிறாள் " என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம் .
* யானையில் ஆண் யானைகள்தான் தந்தங்களோடு இருக்கும் . ஆனால் , அபூர்வமாக சில பெரிய ஆண் யானைகள் தந்தங்களின்றி இருக்கும் . அவை ' மக்னா ' என்று அழைக்கப்படுகின்றன .
* பூனை தன் தலையைச் சொறிந்து கொள்ள முன்னங்கால்களை உபயோகிக்க முடியாது . எப்போதுமே பின்னங்கால்கள்தான் .
* உருளைக்கிழங்கு செடியில் பூப்பூக்கும் . காய் காய்க்கும் . விதை கூட உருவாகும் . ஆனால் , இனப்பெருக்கம் விதைகளால் கிடையாது . கிழங்கின் மேல் காணப்படும் சிறு சிறு குழிகளை கிழங்கோடு வெட்டி புதைத்தால் தான் உருளைக்கிழங்கு செடி உருவாகுமாம் .
--- பாக்யா , ஜூலை 24 - 30 ; 2009 .-- செப்டம் 18 - 24 ; 2009 .

No comments: