Wednesday, November 11, 2009

ஒரு ரசிகர் !

மறக்க முடியாத ஒரு ரசிகர் பற்றி ?
ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரின் ஒரே மகன் தீர்த்தாரப்பன் . அந்த தீர்த்தாரப்பன் இளம் வயதில் இயற்கை எய்தி விட்டான் .
தம் இனிய நண்பரின் மகன் இறந்து விட்டதை அறிந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஒரு இரங்கற்பா எழுதி , ரசிகமணி டி. கே. சி. க்கு அனுப்பினார் .
அதைப் படித்து அதன் இலக்கியச் சுவையில் ஈடுபட்ட ரசிகமணி , கவிமணிக்கு , " இவ்வளவு அழகான இரங்கற்பா பெறும் பொருட்டு இறந்து போக இனியொரு மகன் எனக்கு இல்லையே " ந்னு எழுதினாராம் .
--- K. பாக்யராஜ் , பாக்யா , ஜூலை 17 - 23 ; 2009 .

No comments: