Monday, October 26, 2009

மரணம் .

" மரணம் என்பது முற்றுப்புள்ளியா ?"
" எழுத்தாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் அது கால்புள்ளிதான் . ஜெயகாந்தன் ஒரு முறை சொன்னார் . ' பிறக்கும் முன்பு நான் இறந்திருந்த்தேன் . இறந்த பின்பு நான் வாழ்ந்திருப்பேன் !'"
--- மா. செ. சரவணகுமார் , சென்னை - 17 .
மனித உறவுகள் .
மனித உறவுகளைப் பற்றி எழுதும் அறிஞர்கள் முக்கியமான மூன்று குறைபாடுகள் உறவுக்குக் குறுக்கே நிற்பதாகக் குறிப்பிடுகிறார்கள் .
பிறர் சொல்வதை நாம் கவனமாகக் கேட்பதில்லை ; பிறர் சொல்வதன் முழு அர்த்தத்தையும் நாம் புரிந்து கொள்வதில்லை ; தவறு ஏற்படும்போது நாம் அதை உடனே ஏற்றுக் கொள்வதில்லை .
--- எம்.எஸ். உதயமூர்த்தி .ஆனந்தவிகடன் , 15 - 07 - 2009.

No comments: