Sunday, October 18, 2009

குழந்தை !

குழந்தைக்கு
தாயின் இடுப்பே இருக்கை
தோள்களே தொட்டில்
கால்களே கழிவறை !
--- வி . மருதவாணன் , ஆனந்தவிகடன் , 24 - 06 - 2998 .
சிறு புதுக்கவிதை !
" பெரிய்ய்ய இதிகாசக் கதையைச் சிறு புதுக்கவிதையில் சொல்லிவிட முடியுமா?"
" ஒன்றல்ல இரண்டு கவிதைகளை எடுத்துக்காட்டலாம் .
' நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
வெளுப்பவனின் நாக்கு
அழுக்காக்கிவிட்டது ! "
--- அப்துல்ரகுமான் .
' அப்பனுக்கு
ஆயிரம் மனைவிகள்
எந்தப் பிரச்னையும் இல்லை ;
மகனுக்கு
ஒரே ஒரு மனைவி
ஆயிரம் பிரச்னைகள் ! "
--- கபிலன் .
--- மதிபாரதி , சென்னை - 91 . ஆனந்தவிகடன் 24 - 06 - 2009 .

No comments: