Monday, October 12, 2009

அம்மாடியோ...

* காட் என்பது அட்லாண்டிக் சமுத்திரத்தில் காணப்படும் ஒருவகை மீன் . இது ஒரு தடவைக்கு 60 லட்சம் முட்டைகள் வரை இடக்கூடியது . ஆனால் , முட்டை பொறித்து மீன் குஞ்சாகி வெளிவருவது அதிலே நான்கு அல்லது ஐந்துதான் . அத்தனை குஞ்சுகளும் உயிர் வாழ்ந்தால் அட்லாண்டிக் மகா சமுத்திரமே மீன் மயமாகிக் கடல் நீர் நிலத்தில் புகுந்து விடுமாம் .
* ஆமைகள் ஒரு இடத்தில் முட்டையிட்டால் மீண்டும் அடுத்த ஆண்டு அதே இடத்தில் சென்று முட்டையிடுமாம் .
* உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர் கட்டி முடிக்கப்பட்ட 120 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு மிகப்பெரிய விழாக்களை அங்கே கொண்டாடினார்கள் . உலகிலேயே ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக அளவில் உல்லாசப் பயணிகள் வந்து ஈஃபிள் டவரை காண்கிறார்கள் .
* மனித உடலில் மிகவும் சுறுசுறுப்பான பகுதி இதயமோ , மூளையோ அல்ல . கண்களிலுள்ள தசைப்பகுதிகள்தான் .
* அமெரிக்காவிலுள்ள உடா பல்கலைக் கழக மருத்துவ அறிஞா ஜேம்ஸ் நார்த் , பூண்டு உணவு உண்டு வந்தால் வைரஸ் பாக்டீரியாக்கள் அழிவதுடன் , உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது என்பதை தன் ஆராய்ச்சி மூலம் வெளிப்படுத்தியுள்ளார் .
* ஒரு கப்பலின் மேல் மஞ்சள் வண்ணக் கொடி பறந்தால் அதில் இருக்கும் பயணிகளுக்கு தொற்று நோய் இருக்கிறது என்று பொருள் .
* நீர் யானை ஒரு ரத்தம் சிந்தும் உயிரினம் . பன்றியினத்தைச் சேர்ந்ததான இதன் உடலில் , எண்ணெய் போன்ற சிவப்பு நிற திரவம் கசியும் . அதனால் , இதன் வியர்வையை ' இரத்த வியர்வை ' என்றே கூறுவர் .
* குட்வின் என்பவர் சுவாமி விவேகானந்தரிடம் சுக்கெழுத்தாலராகப் பணியாற்றினார் . விவேகானந்தரின் சொற்பொழிவுகள் அனைததையும் சுருக்கெழுத்தில் பதிவு செய்து , நமக்கு தந்த பெருமை ஜே. கே. குவினையேச் சாரும் .
* விருந்தில் பிரியாணி கூடவே கத்தரிக்காய் கூட்டும் வைக்கிறாங்களே ஏன் தெரியுமா? சாப்பிடுகிற பிரியாணிக் கறியில் உள்ள ' கொலஸ்ட்ரால் ' சாப்பிடுறவர் உடல்ல சேர்ந்துக்காம இருக்கிறதுக்காகத்தான் கத்தரிக்காய் கூட்டாம் .
* அதிக இரைச்சலைக் கேட்பதால் காது மந்தமாகிப் படிப்படியாகச் செவிடாகும் . அதிக ஓசையை ஈர்க்கும் ஆற்றல் நெட்டி லிங்க மரத்திற்கு உண்டு . வீடுகளில் நெட்டிலிங்க மரத்தை வளர்த்தால் காதுகளைக் காக்க முடியும் .
* 21 ல்ட்சம் பேர் இந்தியாவில் லட்சாதிபதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர் .
* இறப்பு நேர்ந்த 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்யலாம் . ஒருவரின் இரு கண்கள் இருவருக்குப் பார்வை கொடுக்கும் . கண் தானம் பெற்றவரின் கண்ணைக் கூட அவர் இறப்புக்குப் பிறகு , மற்றவருக்குத் தானமாகத் தரலாம் .
* பெண்ணின் ஆடையை ஆண் உடுத்திக்கொள்வதற்கு ( அ ) ஆணின் ஆடையைப் பெண் உடுத்திக்கொள்வதற்கு Cross Dressing என்று பெயர்

No comments: