Sunday, October 11, 2009

அம்பானி !

ஒரு கட்டத்தில் , இந்தியாவின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாரிசுகளான முகேஷ் அம்பானியும் , அனில் அம்பானியும் . இந்த இருவரில் , முகேஷ் அம்பானி தம் ஊழியர்களிடையே ஒருநாள் மனம் விட்டுப் பேசும்போது , தம் வெற்றியின் இரகசியத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் .
" பகவான் கிருஷ்ணனைப் போல மாறுபட்டும் வித்தியாசமாகவும் ( Innovative ) சிந்தியுங்கள் ."
" அர்ஜுனனைப் போல் எதுஒன்றையும் , திட்டமிட்டுத் திறம்படச் செயல்படுத்துங்கள் . ( Execution )".
" யுதிஷ்டிரனைப் போல உரிமை உணர்வு கொள்ளுங்கள் . தொழிலில் வெற்றி பெற மட்டுமல்ல , தனிப்பட்ட வாழ்வில் வெற்றி பெறவும் , இதே விதிதான் ; வெற்றிக்கு வேறு எதுவும் தேவையில்லை . அதாவது நம் நிறுவனம் என்று நினைத்து செயல்படுங்கள் " என்றாராம் .
--- லேனா தமிழ்வாணன் , குமுதம் . 17 - 06 - 2009 .

No comments: