Thursday, September 24, 2009

சப்தஸ்வரங்களின் சாவி .

மங்கள இசை என்று அழைக்கப்படும் நாதஸ்வரம் வாசிக்க 2 முக்கியமான அம்சங்கள் தேவை . அதில் ஒன்று நதஸ்வரத்தில் 7 விதமான ராகங்கள் ( சப்தஸ்வரம் ) வெளிப்படுத்தக் கூடிய துவாரங்கள் . மற்றொன்று நாதஸ்வர வித்வான் வாசிக்க பயன்படுத்தப்படுத்தும் சீவாளி .
சீவாளியின் வழியே வித்வான்களின் வாசிப்பு ஸ்வரங்களாக வெளிப்படுகிறது . எனவே , சீவாளியை சப்தஸ்வரங்களின் சாவி என்றும் , நாதத்திற்கு ஸ்வரம் சேர்க்கிறது என்றும் கூறப்படுகிறது .
சீவாளி என்பது ஒருவித நாணல் வகையில் இருந்து தயாரிக்கப்படுகிறது . குறிப்பாக காவிரி , வாய்க்கால் , குளக்கரை போன்ற நீர் நிலைகளில் அதிகளவு காணப்படும் கொருக்குத்தட்டை என்ற நாணல் வகை பயிரில் இருந்து தயாரிக்கப்படுகிறது .
முற்றிய தட்டைகளை அறுவடை செய்து கொண்டு வந்து தோகைகளை நீக்கிவிட்டு தட்டையை மட்டும் காய வைக்கின்றனர் . பின்னர் , தேவையான அளவில் சிறிது சிறிதாக வெட்டி உலர்த்தி , தண்ணீரில் நனைத்து அதற்குரிய இயந்திரத்தை கொண்டு பக்குவப்படுத்தி நுணுக்கமாக தயாரிக்கின்றனர் .
சீவாளி இறுக்கமாக இருப்பதற்கு செம்பிலான நீள உருண்டை தயாரித்து அதற்குள் பொருத்தி , நூலால் இணைத்து தயாரிக்கின்றனர் . ஒரு மாதத்திற்கு 500 சிவாளிகள் தயாரிக்கப்படுகின்றன .
தமிழகத்தில் திருவாவடுதுறை , பண்ருட்டி , திருவீழிமிழலை ஆகிய 3 இடங்களில் மட்டும் தான் நாதஸ்வரத்திற்கான சீவாளி தயரிக்கப்படுகிறது .
ஒரு டன் ரூபாய் ஆயிரம் வரை விற்கப்படுகிறது . சீவாளி செருக பயன்படுத்தும் செப்பி குழலை முன்பு நாங்களே தயாரித்தோம் . இப்போது வேலை அதிகமாகி விட்டதால் மற்றவர்களிடமிருந்து வாங்குகிறோம் .
சராசரியாக 6 மாதம்தான் சீவாளி பயன்படும் என்பதால் அடிக்கடி நாதஸ்வர கலைஞர்கள் வாங்குகின்றனர் . கோடை காலத்தில் அறுவடை செய்து , நெல்லுடன் சேர்த்து அவித்து , நீராகாரத்தில் (சாதம் ஊற வைத்த தண்ணீர் தான் ) ஊறவைத்து , கிட்டி பனையில் சொருகி , நெருக்கி கட்டி முடிச்சு போட்டால் சீவாளி ரெடி .
--- முத்துராமன் , சீவாளி தயாரிப்பாளர் . திருவாவடுதுறை . தினமலர் , 18 - 05 - 2009 .

1 comment:

சகாதேவன் said...

சீவாளி - நல்ல வேளை கீ போர்டில் இன்னும் நாதஸ்வரம் வாசிக்கும் வசதி வரவில்லை.
அருமையான தகவல். நன்றி

சகாதேவன்