Tuesday, September 22, 2009

மலைப் பாம்பு !

மலைப் பாம்புகள் ஆடுகள் , சிறுத்தை , ஆறடி நீள முதலைகளைக்கூட விழுங்கக்கூடிய வல்லமை படைத்தவை . சில சமயம் முள்ளம்பன்றிகளைக்கூட விழுங்கிவிட்டு , அதன் முட்கள் பாம்பின் உடலுக்கு வெளியே நீட்டிக்கொள்வதும் உண்டு .
பொதுவாக , மலைப் பாம்பின் வயிற்றில் இருக்கும் அமிலம் இரையின் குளம்புகள் , கொம்பு , பற்களைக்கூடக் கரைத்து ஜீரணித்துவிடும் . மலைப் பாம்பு காடுகளிலும் , நதிக்கரை ஓரமாகவுமே அதிகம் வசிக்கும் . மலைப்பை ஏற்படுத்தும் பெரிய பாம்பு என்பதால் மலைப் பாம்பு . உலகிலேயே பெரிய பாம்பான ' அனகோண்டா' வின் பெயர் தமிழில் இருந்து போனது என்பது பலருக்குத் தெரியாது . ' ஆனை - கொல்றா ' என்பதுதான் மருவி அனகோண்டா ஆனது .( ஆதாரம் -- என்சைக்ளோபீடியா ஆஃப் அனிமல்ஸ் )!
--- ஹாய் மதன் , ஆனந்தவிகடன் , 20 - 05 - 2009 .

No comments: