Monday, September 21, 2009

வரலாறு !

பெரும்பாலான வரலாறுகள் மன்னர்களை மையப்படுத்தியவையே , மக்களை மையப்படுத்தியவை அல்ல . இரா . பூபாலனின் இந்தக் கவிதையை படியுங்கள் ...
' மகாபாரதம்
இதிகாசமானது .
பகவத்கீதை
வேதமானது .
கண்ணன் , அர்ச்சுனர்
அனைவரும் கடவுளானார்கள் .
எல்லாம் சரி ,
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள் !'
--- வே. திருநாவுக்கரசு , பேராவூரணி . ஆனந்தவிகடன் , 13 - 05 - 2009 ..

No comments: