Monday, September 14, 2009

அரசியல் ஆத்திசூடி !

அகப்பட்டதைச் சுருட்டு .
ஆதாயம் என்றால் காலைப் பிடி .
இலஞ்சம் வாங்கு .
ஈந்தவனின் ( கொடுத்தவனின் ) காரியத்தை நினைவுகொள் .
உறவாடிக் கெடு .
ஊர்ப் பணத்தில் உலா வா .
எதிர்த்தவனை ஒழித்துக்கட்டு .
ஏழைக்கு உதவுவதாய் நடி .
ஐயோ என்று , யார் இறந்தாலும் அழுது புலம்பு .
ஒன்றாய் இருந்து ஊழல் செய் .
ஓட்டுக்கு விலை பேசு .
ஔவை போன்றோர்க்கு அடிக்கடி சிலை வை .
எஃகு போல் எந்த கமிஷன் வந்தாலும் எதிர்கொள் .
--- எஸ். ஜெயம் , கடலூர் - 1 . ஆனந்தவிகடன் . 13 - 05 - 2009 .

No comments: