Tuesday, September 8, 2009

துளசி தீர்த்தம் .

பெருமாள் கோவில்களில் துளசி இலைகளை பிரசாதமாக கொடுப்பார்கள் . இதை , சனிக்கிழமை , ஏகாதசி நாட்கள் , திருவோண நட்சத்திரம் வரும் நாட்களில் பெறுவது மிகவும் நல்லதாகும் .
இப்படிப்பட்ட துளசியை எப்போதெல்லாம் செடியில் இருந்து பறிக்கக் கூடாது என்பதற்கும் விதிமுறைகள் உள்ளன .
பவுர்ணமி , ஞாயிற்றுக்கிழமை , சங்கராந்தி தினம் , நடுப்பகல் , இரவு , சூரியோதயத்திற்கு பிறகு மற்றும் எண்ணெய் தேய்த்த உடம்புடனும் , குளிக்காமலும் துளசி இலையை பறிக்கக்கூடாது .
--- தினத்தந்தி , 30 - 12 - 2008 .

No comments: