Saturday, August 8, 2009

மடாதிபதிகள் .

ஒரு சமயம் மடாதிபதிகள் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது . கடைமடை என்னும் ஊரிலிருந்து கடைசியாக ஒரு மடாதிபதி வந்தமர்ந்தார் . அதைப் பார்த்த மாநாட்டுத் தலைவரான துறவி ,
" வாருங்கள் கடை மடையரே ! " என்று சிலேடையாக அழைத்தார் . பதிலுக்கு அந்த துறவியும் , " வணக்கம் மடத் தலைவரே !" என்று சொல்லி அமர , மாநாட்டுக்கு வந்த துறவிகள் மத்தியில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று .
--- ஒரு சொற்பொழிவில் இதை சொன்னவர் , கவியரசு கண்ணதாசன்

No comments: