Friday, July 24, 2009

அனுமன் -- வாலி .

சேலத்தில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வாலி , இராவணனைப் பற்றி கூறிய கவிதை வரிகள் :
" குரங்கு என அதன் வாலில் தீ வைத்தானே ,
அது கொளுத்தியது அவன் ஆண்ட தீவைத்தானே !"
சாப்பாடு .
ஒரு ஆள் ஹோட்டல் ஒன்றிற்குச் சென்றான் . தன் இரவு சாப்பாட்டிற்கு கோழி ஒன்றை கொண்டு வரும்படி சர்வரிடம் ஆர்டர் கொடுத்தான் . சர்வர் கொண்டுவந்து வைத்த மாமிசத்தை சாப்பிட்டுவிட்டு ,
" இதன் ருசி கோழி மாமிசம் போல் இல்லையே ..." என்று சர்வரிடம் கேட்டான் .
சர்வர் : " எங்களுக்குப் போதுமான கோழிக்கறி கிடைக்கவில்லை . அதனால் கோழிக்கறியுடன் குதிரைக் கறியையும் சேர்த்தோம் " .
வாடிக்கைக்காரர் : " கோழிக்கறியுடன் எவ்வளவு குதிரைக்கறி சேர்த்தீர்கள் ?"
சர்வர் : " இது பாதி ; அது பாதி சேர்த்தோம் !"
வாடிக்கைக்காரர் : " அது எப்படி பாதிக்குப் பாதி ... அப்படியும் ருசி இல்லையே ...?"
சர்வர் : " அதாவது , ஒரு குதிரைக்கு ஒரு கோழி வீதம் சேர்த்தோம் .." என்றான் .
--- ( பிரதமர் ராஜிவ் காந்தி , தேசிய தலைநகர பிரதேச திட்ட போர்டின் முதல் கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசுகையில் தங்கள் மாநிலங்களுக்கு உரியதற்கு மேல் அதிக தொகை மத்ய அரசிடம் கோரும் மாநிலங்கள் பற்றிக் குறிப்பிட்டது . நாள் : 04 - 06 - 1985 . இடம் : புது டில்லி .

No comments: