Monday, July 20, 2009

பிஇஓஎஸ்.

மூளை பொய் சொல்லுமா ?
பிஇஓஎஸ்.
மூளையில் தகவல்களுக்கு ஏற்ப உருவாகும் எதிர்வினைகளை அவற்றின் பல்வேறு மட்டத்தில் கண்டறிவதுதான் Brain Electrical Oscillations Signature என்ற இந்த டெக்னிக் . ஈஈஜி பதிவுகள் மூலம் ஒரு நபர் ஒரு விஷயத்தைக் கேட்கும்போதோ பார்க்கும்போதோ உண்டாகும் மாறுதல்களை கவனிப்பர் . அந்தக் காட்சி , அந்த மனிதரின் மூளையில் ஏற்கனவே பதிந்துள்ள தகவல்களைத் தூண்டுவதாக இருந்தால்தான் மாறுதல்கள் பதிவாகும் .
நார்கோ அனாலிஸிஸ் .
சோடியம் பெண்டதால் அல்லது சோடியம் அமிதால் ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தி நரம்பு மண்டலத்தில் செயல்படுவதன்மூலம் ஒருவருடைய உஷார் தன்மை குறைக்கப்படுகிறது . இந்த மருந்துகள் வேலைசெய்யும் போது ஒருவரால் பொய் சொல்வது கடினம் என்று கூறப்பட்டுகிறது . தூக்கம் போன்ற இந்நிலையில் ஒருவர் தன்னிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வார் .
பொய் கண்டறியும் கருவி .
ஒரு மனிதரின் மனரீதியிலான எதிர்வினைகளைக் கணக்கிடும் கருவிகள்தான் பாலிகிராப் அல்லது பொய் கண்டறியும் கருவி எனப்படும் இவை . தசைகளில் விரிவடைந்த மற்றும் விரிவடையாத நிலை .
இஷ்டப்படி கட்டுப்பட்டுத்த முடியாத உடல் செயல்களான தோலின் கடத்தும் திறன் , இதயத் துடிப்பு , உடலில் இருக்கும் சில வேதிப்பொருட்களின் அளவு ஆகியவை கண்காணிக்கப்படும் . ஒருவர் பொய்சொன்னால் இவற்றில் திடீர் மற்றும் கட்டுப்படுத்த முடியாத மாற்றங்கள் ஏற்படும் என்பது இதன் அடிப்படை .
பிரைன் மேப்பிங் .
தன்னையறியாமல் ஒருவர் பங்கேற்பதையும் அவரது மூளையில் பதிந்திருக்கும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டது இது . ஒருவர் பங்கு கொண்ட எந்தச் சம்பவமும் அவரது மூளையில் ஞாபகமாகப் பதிந்திருக்கும் . ஒருவரது மூளையில் இருக்கும் தகவல்களைப் பெற பல்வேறு தொழில்நுட்ப ங்களை இம்முறையில் பயன்படுத்துகிறார்கள் . மூளையின் பி - 300 எனப்படும் குறிப்பிட்ட எதிர்வினைகள் கணக்கிடப்படுகின்றன .
--- சசி சம்பள்ளி , பி.எஸ். நாராயணசாமி , கே.திவ்யதர்ஷினி . த சன்டே இந்தியன் . 22 மார்ச் 2009 .

No comments: