Sunday, July 19, 2009

நிஜமாவா ?

* பிறந்த குழந்தை மூன்று மாதங்கள் சென்ற பிறகு அழும்போது தான் கண்களிலிருந்து கண்ணீர் வருமாம் .
* உடல் உறுப்புகளில் மிகவும் சூடானது கல்லீரலும் , சிறுநீரகமும் தான் , மிகவும் குளிர்ச்சியான உறுப்புகள் இதயமும் நுரையீரலும் தான் . மனித உடலில் இருந்து வெப்பம் மட்டும் வெளியேறா விட்டால் 24 மணி நேரத்தில் உடலில் வெப்பம் 185 டிகிரி பாரன்ஹீட்டுக்கு உயர்ந்துவிடும் .
* ஆங்கிலத்திலேயே நூல்கள் எழுதிய குஷ்வந்த் சிங் , தனது தாய்மொழியான பஞ்சாபி மொழியில் ஒரு நூல் கூட எழுதியதில்லை யாம் .
* மனித உடலில் ஏற்படும் வலியை ' டால்ஸ் ' என்கிற அளவால் குறிப்பிடுகிறார்கள் . வலியில் கடுமையானது பெண்ணுக்கு ஏற்படும் பிரசவ வலியே . அதன் அளவு 9.5 டால்ஸ் .
* அரிசி ரகங்களில் மிக நீளமான அரிசி ரகம் பஞ்சாப் மாநில பாசுமதி அரிசி . ( 8 மில்லி மீட்டர் ) .
* ஆங்கிலத்தில் புழுவிலிருந்து பட்டுப்பூச்சியாகும் மாற்றத்தை ' மெடமார்ஃபோஸிஸ் ' என்பார்கள் .

No comments: