Tuesday, July 14, 2009

கீதாசாரம் .

எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது .
எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது .
எது நடக்க இருக்கிறதோ , அதுவும் நன்றாகவே நடக்கும் .
உன்னுடையதை எதை இழந்தாய் , எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ , அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .
எதை கொடுத்தாயோ , அது இங்கேயே கொடுக்கப்பட்டது .
எது இன்று உன்னுடையதோ , அது நாளை மற்றொருவருடையதாகிறது .
மற்றொருநாள் , அது வேறொருவருடையதாகும் .
" இதுவே உலக நியதியும் , எனது படைப்பின் சாராம்சமாகும் ".

No comments: