Wednesday, July 8, 2009

கணக்கு !

கழித்தல் கணக்கு !
நம் குழந்தைகளுக்குக் கழித்தல் கணக்கைக் கற்பிக்கும்போது , ' பக்கத்து எண்ணிலிருந்து ஒன்றைக் கடன் வாங்கிக்கொள் ' என்கிறோம் . வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில்லை ! சீனாவில் அதே கணக்கைப் போதிக்கும் போது , ' மிகுதியாக இருக்கும் எண்ணில் இருந்து ஒன்று என்ற எண்ணை எடுத்து பற்றாக்குறை உள்ள எண்ணுக்குக் கொடு ' என்கிறார்கள் . இதனால் , ' வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டியதில்லை ' என்ற கருத்து நம் குழந்தைகள் மனதிலும் , இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தருவதுதான் நியாயம் ' என்ற கருத்து அவர்கள் குழந்தைகளின் மனதிலும் விதைக்கப்படுகிறது .
--- ' ஒன்றே சொல் , நன்றே சொல் ' நிகழ்ச்சியில் சுப .வீரபாண்டியன் .( கலைஞர் தொலைக் காட்சி ) --- எஸ் .சரோஜினி , பெங்களூரு . அவள் விகடன் . 24 - 10 - 2008 ..

No comments: