Thursday, July 2, 2009

பழமொழியின் பின்னணி .

' ஆறிலும் சாவு , நூறிலும் சாவு ' என்று ஒரு பழமொழி சொல்வார்கள் . இதற்கு , சாவு ஆறிலும் வரும் , நூறிலும் வரும் என்றே நாம் எல்லோரும் பொருள் கொள்கிறோம் . வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தான் இப்படிச் சொன்னார்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் , அதன் உண்மையான பொருள் இதுவல்ல .
குருசேத்திர போரில் , போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி , அவனிடம் சென்று , பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறாள் . அப்போது கர்ணன் கூறுகிறான் : ' தாயே ! நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி , கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூறாவது ஆளாக போரிட்டாலும் சரி , இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும் . ஆகவே , ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு . எப்படி செத்தால் என்ன ? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் ' என்கிறான் .
இங்கே கர்ணன் கூறியதுதான் , மேற்படி பழமொழிக்கு உண்மையான பொருள் .
--- குமாரி சீனிவாசன் , தாராபுரம் . தினத்தந்தி . 05 - 08 - 2008 .

2 comments:

இரா. முத்துப்பாண்டியன் said...

மிகவும் சரியே. அதே போல் தான் "ஆயிரம் வேரைக் கொன்றவன் (ஆயிரம் வேர்களின் மருத்துவ குணங்களை நன்கு அறிந்தவன்) அரை வைத்தியன்" என்பதை "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்று ஆக்கி விட்டார்கள்.

இரா. முத்துப்பாண்டியன்.

க. சந்தானம் said...

இரா. முத்துப்பாண்டியன் அவர்கட்கு , நன்றி ! தாங்கள் கூறுவதும் மிக நன்றே !