Sunday, June 28, 2009

தண்டி யாத்திரை !

1930 -ம் ஆண்டு மார்ச் 12 -ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து காந்திஜி தண்டி யாத்திரை தொடங்கினார் .அவருடன் ஒரு லட்சம் பேர் யாத்திரையில் கலந்து கொண்டனர் . தினந்தோறும் அவருடன் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து சென்றனர் . பயணத்தின் போது நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச பத்திரிகைகள் தண்டி யாத்திரையை தலைப்பு செய்தியாக வெளியிட்டன . சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து 390 கி. மீ . நீளமுள்ள தண்டி கடற்கரைப் பகுதியை ஏப்ரல் 5-ம் தேதி காந்திஜி அடைந்தார் . அன்றே அவர் தண்டியில் உப்பு அள்ளியபோதும் , முறைப்படியான உப்பு அள்ளும் போராட்டம் 1930 -ம் ஆண்டு இதே நாளில் நடந்தது . காந்திஜியை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள உப்பளங்களில் இதே நாளில் மக்கள் உப்பு அள்ளினர் .
---தினமலர் . 06 - 04 - 2009 .

No comments: