Monday, June 15, 2009

காந்தி கணக்கு .

அசலான காந்தி கணக்கு என்பது , நேர்மையான உச்சமான அடையாளம் .
தபாலில் வந்த அஞ்சல் உறையைப் பிரித்து வைத்து உட்பக்கத்தை ஒரு பக்கக் காகிதமாக பயன்படுத்திய சிக்கனவாதி காந்தி . ஒவ்வொரு காசுக்கும் கணக்கு எழுதியவர் ; எதிர்பார்த்தவர் ; நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டவர் .
ஆசிரமத்துப் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இளைய மகன் மணிலால் , தன் அண்ணன் ஹரிலாலுக்குக் கடனாக அவசரத்துக்கு கைவசம் இருந்த ஆசிரமப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்தது தெரிந்ததும் காந்தி எடுத்த கடும் நடவடிக்கை இன்றைக்கும் கற்பனை செய்ய முடியாதது . சென்னைக்குச் செல்ல ஒரு வழி டிக்கட் எடுத்து மணிலால் கையில் கொடுத்துவிட்டு , ' அடுத்த ஒரு வருடத்துக்கு சென்னையில் உழைத்துப் பிழைத்து உன் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்கும் நீயே காசு சம்பாதித்தால்தான் உனக்கு இதன் அருமை தெரியும் ' என்று சொல்லிவிட்டார் . போகிற இடத்தில் யாரிடமும் காந்தி மகன் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது என்பது இன்னொரு நிபர்ந்தனை . மணிலால் அப்படியே சென்னை நடைபாதைகளில் படுத்துத் தூங்கி ஓராண்டு உழைத்து வாழ்ந்தபின் அப்பாவிடம் திரும்பினார் .
இன்றைய அரசியலில் அப்படிப்பட்ட அப்பா -- பிள்ளைகளை எதிர்பார்த்தால் அது நம் தவறுதான் .
--- ஞாநி , ஓ...பக்கங்கள் . குமுதம் 18 - 03 -2009 .

No comments: