Sunday, May 31, 2009

இரகசியம் !

பத்து விரல் இரகசியம் !
"மனிதனுக்குப் பத்து விரல் இருக்கே அது எதுக்காக ?
அவன் ரொம்ப அவசரத்திலே இருக்கான் . எதை எதையோ மறந்துடறான் . எதை மறந்தாலும் பத்து மாதம் சுமந்து பெத்த அம்மாவை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் பத்து விரலை வச்சிருக்கான் . வேலை செய்யற போது பத்து விரலும் கண்ணிலே படும் . அப்போதாவது அம்மா ஞாபகம் வரும் இல்லையா ? சில சந்தேகப் பேர்வழிகள் கேட்டாங்க , அப்போ காலிலே பத்து விரல் இருக்கே , அது எதுக்காகன்னு . சில பேர் தாயாரைக் காலாலே உதைக்கிற அளவுக்கு கொடூரமானவங்களா இருப்பாங்க . அப்படி உதைக்கிற சமயத்துலே , ' பத்து மாதம் சுமந்து பெத்தவடா . அந்த அம்மா ' ன்னு நினைவு வரட்டுமேன்னு தான் காலிலேயும் ஆண்டவன் பத்து விரலை வச்சான் ."
--- இந்த விளக்கத்தை வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம் கூற காஞ்சிப் பெரியவர் கேட்டு மிகவும் பாராட்டினாராம் .
வில்லும் -- உடுக்கையும் .
வில்லுப்பாட்டு தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் ஒரு கலை .
அதில் பயன்படுத்தும் வில் இராமேஸ்வரத்தை -- தனுஷ்கோடியை நினைவு படுத்தும் . வில்லுப்பாட்டில் பயன்படும் உடுக்கை , கையிலை மலையில் உள்ள சிவனை நினைவூட்டும் . கயிலை முதல் இராமேஸ்வரம் வரை நினைவு வருவதால் வில்லுப்பாட்டு தேசிய ஒருமைப் பாட்டை நினைவு படுத்தும் ஒரு கலை .
--- காஞ்சிப் பெரியவர் .05 - 01 - 1983 .

No comments: