Friday, May 29, 2009

சட்டங்கள் .

வேடிக்கையான சட்டங்கள் .
வெளிநாடுகளில் இருக்கும் சில சட்டங்கள் நமக்கு வேடிக்கையாக தோன்றும் . அத்தகைய சட்டங்களில் சில :
மிக்சிகன் நாட்டில் உள்ள பெண்களின் முடியை வெட்டிக்கொள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை . அங்கு பெண்களின் முடி கணவனுக்கே சொந்தமானது . அவனது அனுமதியில்லாமல் முடியை வெட்டிக்கொள்ளக் கூடாது .
வளர்ச்சி அடைந்த நாடுகளை கொண்ட இங்கிலாந்தில் ( யூ . கே . ) ஒரு விசித்திரச் சட்டம் இருக்கிறது . கர்ப்பிணி பெண்கள் அவசர ஆத்திரத்திற்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கலாம் . அதற்கு காவலரின் தலைக்கவசத்தை கேட்டாலும் போலீஸ்காரர் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் . அப்படி கொடுக்காவிட்டால் குற்றம் .
அலெக்சான்டிரியா நாட்டில் கணவன் , மனைவியோடு உடலுறவு கொள்ளும் போது வாயில் துர்நாற்றம் இருக்க கூடாது . வெங்காயம் , பூண்டு போன்றவற்றை சாப்பிட்டு அதன் மூலம் வாயில் வாடை வந்தால் கூட மனைவியோடு உடலுறவு கொள்ள முடியாது . மீறி உடலுறவு கொண்டால் கணவனுக்கு , மனைவி தண்டனை வாங்கி தரலாம் .
இங்கிலாந்தில் 14 வயதுக்கு மேற்பட்டோர் தினமும் ஒரு மணி நேரம் குறிப்பிட்ட ஒரு உடற்பயிற்சியை கட்டாயமாக செய்தே ஆக வேண்டும் .
டென்மார்க்கில் சிறைக் கைதிகள் தப்பித்துப் போவது குற்றமில்லை . மீண்டும் பிடிபட்டால் சிறையில் அவன் மற்ற கைதிகளுக்கு சேவகம் செய்ய வேண்டும் .
வெர்மான்ட் நாட்டில் பற்களை கட்ட வேண்டும் என்றால், பெண்கள் கணவனிடம் அனுமதி கடிதம் பெற்று டாக்டர்களிடம் கொடுத்தால் மட்டுமே பற்களை மாற்ற முடியும் .
தாய்லாந்தில் ஆண் , பெண் இரு பாலரும் உள்ளாடை அணியாமல் ஆடை அணியக்கூடாது . உள்ளாடை இல்லாமல் வெளியே யாராவது உலாவினால் அவர்களுக்கு தண்டனை உண்டு . இப்படி பல விநோத சட்டங்கள் உலகமெங்கும் இருக்கின்றன .
--- தினத்தந்தி , ( மும்பை பதிப்பு ) . 08 -02 -2009 .

No comments: