Tuesday, May 26, 2009

தமாஷ் !

" சார் ! இந்த ஊதுபத்தியை வாங்கிக்குங்க... வாசனை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் ! "
" ஸாரிப்பா ... நான் இளங்கோவன் கோஷ்டி ! "
" எங்க வீட்டுப் பூட்டை உடைச்சு ஒரு லட்சம் ரூபாயைத் திருடிட்டுப் போய்ட்டாங்க இன்ஸ்பெக்டர் ! "
" ஆச்சர்யமா இருக்கு . பூட்டுக்குள்ளயா ஒரு லட்ச ரூபா வெச்சிரும்தீங்க ! "
" ரேஷனுக்கும் ஃபேஷனுக்கும் என்னடா ஒற்றுமை ? "
" ரேஷன்ல எடை குறையும் , ஃபேஷன்ல உடை குறையும் " .
" என்னது ! இதுதான் தலைவரோட செல் நம்பரா... பத்து டிஜிட் வரலியே ? "
" அட, நீ வேற... இது அவரோட பாளையங்கோட்டை செல் நம்பர் ! ".
" காலம்பூரா உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு எங்கப்பா வசதி செஞ்சு வெச்சுட்டுப் போயிருக்கார் ! "
" நிறைய சொத்து சேர்த்து வெச்சுட்டுப் போயிருக்கிறாரா ? "
" அதில்லை... செம ஸ்டிராங்கா ஒரு டைனிங் டேபிள் வாங்கி வெச்சிட்டாரு ! "
" டாக்டர் இருக்காருங்களா ?"
" ரவுண்ட்ஸ்ல இருக்கார் ! "
" அப்படியா ! தெளிஞ்சதும் வர்றேன் ! "
" உடம்புக்கு என்ன செய்யுது ?"
" காஸ் டிரபிள் டாக்ட ... ரெண்டு நாளா சாப்பாடே இல்லே ..."
" அடடா ! அடிஷனல் சிலிண்டர் ஒண்ணு புக் பண்ணி வைச்சுக்க கூடாதா !"
" என்னோட முதல் மனைவி என்னைச் ' சுவாமி 'னும் , இரண்டாவது மனைவி ' நாதா' ன்னும் தான் கூப்பிடுவாங்க !"
" பரவாயில்லையே ! சரித்திரக் கதை படிக்கிற மாதிரி இருக்கே ! அப்ப ... உங்க பெயர்தான் என்ன ? "
" சுவாமிநாதன் !"
" உங்க வீட்டுக்கு நாளை வரலாம்னு இருக்கேன் . எப்படி வரணும் ?"
" ஒரு டஜன் ஆப்பிள் வாங்கிட்டு வரணும் !"
பஸ்ஸில் :
இவள் :" பையா ...இது உன் பையா ? "
அவன் : " ஆமாம் பாட்டி . நீ வை பாட்டி !"
" என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லு ...!'
" முடியவே முடியாது .."
": ஏன்...? "
" என்னை மன்னிச்சுட்டேன்ங்கறது ரெண்டு வார்த்தை . ஒரு வார்த்தை இல்லை !"
" ஏய் மிஸ்டர் ! பின் ஸீட்லேர்ந்து முன்னால இருக்கிற என் காலை ஏன் நெருடறீங்க ?"
" இங்கமிங் கால் மேடம் !"
" அந்தக் காலை இப்ப நான் கட் பண்றேன் !"

No comments: