Monday, May 25, 2009

காரணம் .நிகழ்வு

சீனாவின் காரணம் .
மூன்றே வருடங்களில் சாலைப் போக்குவரத்து முழுவதையும் மின்சார - ஹைப்ரிட் மயமாக்க ( மின்சாரம் மற்றும் எரிவாயு இரண்டிலும் ஒரு சேர இயங்கும் வாகனங்கள் ) திட்டமிட்டுள்ளது சீனா .
சுற்றுச்சூழல் சீர்கேடுதான் இம் முடிவுக்குக் காரணம் என்று சீனா கூறினாலும் , அந்நாட்டுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வர வேண்டிய பெட்ரோலியப் பொருட்கள் அமெரிக்கக் கடல் பிராந்தியத்தைத் தாண்டி வரும் ரிஸ்க்கை அது விரும்பாததே உண்மையான காரணமாக இருக்கலாம் !
--- ஆனந்தவிகடன் . 15 - 04 - 2009 .
நெகிழ்ந்த நிகழ்வு ?
ஒருநாள் மாணவன் ஒருத்தன் வகுப்பறைக்குள்ள வேகமா ஓடிவந்து தான் ஒரு இரட்டை வால் பூனையைப் பார்த்ததா கூறினான் . அவன் சொன்னதை யாரும் நம்பல .அதைக் கேட்ட ஆசிரியர் அவன் பொய் சொல்லி குறும்பு செய்வதா நினைச்சு அவனை பிரம்பால் நாலு போடு போட்டாரு . அன்னையிலிருந்து அவனை எல்லோரும் பொய்யன்னு அழைத்துக் கிண்டல் செஞ்சாங்க . நண்பர்களால் ஒதுக்கப்பட்டான் . ஆசிரியர்களால் வெறுக்கப்பட்டான் . இதனால அவன் படிப்புல ஆர்வம் இழந்தான் . அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு . ஒருநாள் அவன் காணாமப்போயிட்டான் .
எல்லாரும் அவனைத் தேடினப்ப அவன் ஒரு மரத்துல தூக்குப் போட்டுத் தொங்கறதைப் பார்த்தாங்க . அவனோட இறுதிச் சடங்குக்கு பள்ளி ஆசிரியர்களும் , மாணவர்களும் போனாங்க . அப்ப அங்க ஒரு பூனையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாங்க . அந்தப் பூனைக்கு இரண்டு வால்கள் இருந்திச்சு .
இது ஒரு உண்மை நிகழ்ச்சி . இது அமெரிக்காவுல முசோரி நகர்ல , 1970 -ல நடந்ததாம் .
--- பாக்யராஜ் , பாக்யா இதழ் , ஏப்ரல் 24 -- 30 ; 2009 .

No comments: