Thursday, May 21, 2009

தேச ஒற்றுமை .

ஆட்டோ ஸ்டாண்டில் தேச ஒற்றுமை .
மத வேற்றுமைகளும் , ஜாதி வேறுபாடுகளும் நிறைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதை தவறு என்று சுட்டிக்காட்டி மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு அம்பாசமுத்திரம் பகுதி ஆட்டோ டிரைவர்கள், முயற்சி சற்று வித்தியாசமானது .
இந்தியாவில் இருக்கும் இந்து மதம் , ஜைன மதம் , புத்த மதம் , சீக்கிய மதம் , இஸ்லாமிய மதம் , கிறிஸ்துவ மதம் ஆகியவற்றை எழுதி அவற்றில் இருக்கும் எழுத்துக்கள் மூலமாக இந்தியன் என்று பளிச்சிட வைத்திருக்கிறார்கள் ... இப்படி :
H I N D U I S M
J A I N I S M
B U D D H I S M
S I K H I S M
I S L A M
C H R I S T I A N I T Y . ( PROUD TO BE INDIAN . ) --- தினமலர் 02 -03 -2009 .
டிப்ஸ் .
உங்களுக்குத் தெரியுமா ? டிப்ஸ் .
பெரிய ஓட்டல்களில் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது சர்வ சாதாரணம் . இந்த டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் ஆரம்பித்தது இங்கிலாந்தில் தான் . அங்கு சத்திரங்களில் ஏராளமானவர்கள் வந்து தங்குவார்கள் . அப்படித் தங்குபவர்கள் சத்திரங்களில் உள்ள பணியாட்கள் தங்களைச் சீக்கிரம் கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு , அவர்களுக்குத் தனியாகப் பணம் கொடுப்பார்கள் . ' To Insure Promptitude ' என்பதில் உள்ள மூன்றெழுத்துக்கள்தான் Tip ஆயிற்று .
' குழந்தை வேண்டுமென்று
மக்கள் அரசைச் சுற்றியது
அந்தக் காலம் .
குழந்தை வேண்டாமென்று
அரசு மக்களைச்
சுற்றுவது இந்தக் காலம் ' என்பது புகழ்பெற்ற கு. க. கவிதை

No comments: