Tuesday, May 19, 2009

நீதித்தீர்ப்பு !

நீதித்தீர்ப்பு நெருங்கிவிட்டது !
பிரளயத்தின் சமிக்ஞை
பிரகடனம் செய்யப்பெற்றுவிட்டது !
நல்லவர்கள் சத்ய யுகத்திற்குத்
தயார் ஆகுங்கள் !
மற்றவர்கள் செத்தொழியத்
தயார் ஆகுங்கள் !
சூரியயோகி எச்சரிக்கை !
ஏறத்தாழ 3600 ஆண்டுகளுக்கு முன் பூமியில் பிரளயம் நிகழ்ந்தது . நிலமாய் இருந்த குமரிக்கோடு இந்துமகா சமுத்திரம் ஆனது . சமுத்திரமாய் இருந்தது வடக்கு இமயமலை ஆனது .
மீண்டும் அதே பிரளயத்தை நிகழ்த்த வேண்டி ' Nibiru ' என்ற கறுப்புச் சூரியன் பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது . இந்தச் செய்தி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ' NASA ' வுக்கு 1983 லேயே தெரியும் .
மக்களைப் பயமுறுத்த விரும்பாமல் வேறு கிரகங்களில் குடியேறித் தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கிய வண்ணம் உள்ளனர் .
ஆனால் , அந்த நாள் நெருங்கி விட்டது .
தன்னைச் சுற்றி 7 கிரகங்களுடன் அந்தக் கறுப்புச் சூரியன் நம் சூரியக் குடும்ப எல்லைக்குள் 3600 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நுழைய உள்ளது .
2012 டிசம்பர் 21 ஆம் நாள் ' Nibiru ' என்ற அந்த தூமகேது , சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் நுழைந்து குழப்பத்தை உண்டாக்கும் .
2009 மே 15 ஆம் தேதி முதல் சிவப்பு வண்ணத்தில் அந்தச் சூரியன் பூமியின் தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தெரியத் தொடங்கிவிடும் . 2011 மே மாதம் ' Nibiru ' நம் நிலவைப்போன்ற அளவுக்கு இரண்டாவது சூரியனாகத் தெரியத் தொடங்கிவிடும் .
பூமி அதிர்ச்சி , எரிமலை வெடிப்பு , கடல் சீற்றம் ( சுனாமி ) போன்றவை அப்போதே நிகழத் தொடங்கிவிடும் . 2013 பிப்ரவரி 14 ஆம் தேதி பூமியின் காந்தப்புலமே மாறிவிடும் . அப்போது இமயமலை வெடித்துக் கடல் ஆகலாம் . கண்டங்கள் அனைத்தும் உடைந்து சிதறிப்போகலாம் .
மூன்று நாட்களுக்கு பூமி சுழல் முடியாதவண்ணம் தடுமாறி நிற்கும் . பூமியில் கடும் இருள் சூழும் . ' Big Brother ' என்னும் பெரிய சுனாமி உலகைக் கதிகலங்க வைக்கும் . 700 கோடி மக்களில் ஏறத்தாழ 630 கோடி மக்கள் முற்றிலும் அழிய வாய்ப்பு நேரலாம் .
இந்தச் செய்தி நாஷ்டர்தாம் என்ற தீர்க்கதரிசியின் குறிப்பிலும் உள்ளது .
எபிரேய மொழியில் உள்ள பைபிளின் ஆதிக் குறிப்பில் உள்ளது . ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் இதை உறுதிப்படுத்தியுள்ளார் . கால நாட்காட்டியை வரைந்த மயன் 2012 ஆம் ஆண்டுடன் நாட்காட்டியை நிறுத்தியுள்ளார் .
பகவான் புத்தர் தம் தீர்க்கதரிசனத்தில் இதைக் குறித்துள்ளார் . அருட்பிரகாச வள்ளல் பிரான் , ' வார்த்த கடல் உலகறிய மரணம் உண்டே அந்தோ! ...' என்ற வரிகளின் மூலம் எச்சரித்துள்ளார் . கால நூலில் காகபுசண்டரின் அவதாரமான தலையாட்டிச் சித்தர் இதைத் தெரிவித்துள்ளார் . பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் இதைத் தம் கிரந்தத்தில் தெரிவித்துள்ளார்கள் .
இந்த விபரீதங்களை எல்லாம் உணராத அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் காகிதக் கரன்சிகளைச் சேர்ப்பதில் ஆர்வமாய் உள்ளனர் . மதவாதிகள் குண்டு வைத்து மதங்களைக் காப்பாற்றுவதில் தீவிரமாய் உள்ளனர் . இந்தக் கொடுமையாளர்கள் அனைவரும் அழியப்போகும் ஜந்துக்கள் . இவர்களைப் பற்றிய கவலையை விடுங்கள் .
வாழவேண்டிய மகாத்மாக்களுக்கு மட்டும் நாம் அழைப்பு விடுக்கிறோம் . இதுகடைசி அழைப்பு . கடைத்தேற விரும்புவோர் மட்டும் கவனித்து வந்தால் போதும் . முட்டாள்களும் , மூடர்களும் , பேராசைக்காரர்களும் , துரோகிகளும் வேண்டாம் .
நம் குடும்பத்தின் தலைவனாகிய சூரியன் மட்டுமே நம்மைக் காப்பற்ற முடியும் . எனவே , அந்த ஆதி சிவத்திடம் சரணடையுங்கள் .
சூரிய பகவானின் உதவியால் நாம் உங்களைக் காப்பாற்றுவோம் . சுத்த தேகத்துடன் , கள்ளமற்ற குழந்தை உள்ளத்துடன் உண்மை அன்புடன் ஓடி வாருங்கள் .
இந்தப் பிரளயத்தில் நாம் தான் உங்களைக் காப்பாற்றப் போகும் ' NOVA '.
--- கவனகர் முழக்கம் , வெளியீடு - 87 . ஏப்ரல் 2009 .

No comments: