Monday, May 18, 2009

கண் உண்டு !

காதலுக்குக் கண் உண்டு !
உணர்ச்சி மட்டுமல்ல...அந்த உணர்ச்சிக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் சேர்ந்ததுதான் காதல் !
ஒரு தாய் தனது குழந்தையைக் கொஞ்சும்போது அந்தக் குழந்தை அதனை அங்கீகரிப்பது போல நடந்துகொள்ள வேண்டும் . இல்லை எனில் , தாய்க்கு நாளடைவில் குழந்தையைக் கொஞ்ச வேண்டும் என்கிற ஆசையே இல்லாமல் போய்விடும் . இது காதலுக்கும் பொருந்தும் .
பொதுவாக , காதலை ' கம்பேனியனேட் லவ் ', ' ரொமாண்டிக் லவ் ' என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் . கம்பேனியனேட் லவ் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மட்டும் நிகழ்வது அல்ல . பெற்றோர் , குழந்தை , அண்ணன் , தங்கை , நண்பர்கள் இடையேயான பாசமும் ஈர்ப்பும் இவ்வகை . இதில் செக்ஸ் இருக்காது . ரொமாண்டிக் லவ் ஆணுக்கும் பெண்னுக்கும் இடையே மட்டும் நிகழ்வது . இதில் செக்ஸும் தவிர்க்க முடியாத அங்கம் .
' மூளையில் எண்டார்பின் என்கிற ரசாயனம் அதிகம் சுரந்தால் கம்பேனியனேட் லவ் உண்டாகும் . டொபாமைன் , நார் எபினெர்ஃபின் , செரோட்டினின் போன்ற ரசாயனங்கள் அதிகம் சுரந்தால் ரொமாண்டிக் லவ் உண்டாகும் .
--- டாக்டர் டி . நாராயணரெட்டி . ஆனந்தவிகடன் . 11 - 02 - 2009 .

No comments: