Sunday, May 17, 2009

அப்படியா !

--- அர்ஜுனனுகுரிய பல பெயர்களில் " பல்குநன் " என்பதும் ஒரு பெயர் . பங்குனி உததிர நாளன்று பிறந்ததால்
அவனுக்கு " பல்குநன் " என்று பெயர் அமைந்தது .
--- தமிழ் நாட்டிலேயே ஹரிஜனங்களுக்காகத் திறந்து விடப்பட்ட முதல் ஆலயம் மதுரை ஆலயம்தான் .
--- சிற்ப சாஸ்திரங்களின்படி , சிவன் கோயிலின் கிழக்கு , மேற்கு கோபுரங்கள்தான் மிகவும் முக்கியம் .
--- பூமி வெப்பமாவதைத் தடுக்க உலகம் முழுவதும் 700 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபை .
---ஷு லேஸின் பிளாஸ்டிக்கால் ஆன கூர்முனைக்குப் பெயர் ' ஆக்லெட்ஸ் '
--- நம் உடம்பில் காதுகளும் மூக்கும் சாகும்வரை வளர்ந்துகொண்டே இருக்குமாம் .
--- எல்லா நாடுகளிலும் ' இண்டியன் இங்க் ' என்று அழைக்கப்படும் இந்த இங்க் உண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில்தான் .
--- மலர்களிலிருந்து தேனை வண்டுகள் சேகரிப்பதில்லை . மலர்கள் சுரக்கும் திரவம் தேனீக்களின் உடலுக்குள் சென்ற பிறகுதான் தேனாக மாறுகிறது .
--- மங்கோலிய நாட்டில் ஒட்டகப் பாலில் எடுக்கப்பட்ட மோரை தேசிய உணவாக வைத்துள்ளார்கள் .
--- காபி தயாரிக்கும்போது ஒரு சிட்டிகை சர்க்கரையை லேசாக வறுத்துப் போட்டு ஆற்றினால் நல்ல நுரை கிடைக்கும் .
--- உழைப்பு மூன்று தீமைகளை களைகிறது . பொழுதுபோக்காமை , கெட்ட பழக்கம் , வறுமை .
--- யானையின் துதிக்கையில் நாற்பதினாயிரம் நரம்புகள் உள்ளன . நமக்கு 527 நரம்புகள்தான் .
--- ஒரு நிமிடம் பாராளுமன்றம் இயங்குவதற்கு அரசு செலவழிக்கும் தொகை 26 ஆயிரம் ரூபாய் .
--- வியர்வை வெளியேற முடியாமல் உடலின் துவாரங்கள் அடைபட்டிருந்தால்தான் வேர்க்குரு . அந்த இடங்களில் பாக்டீரியாக்கள் உருவானால் அதுதான் வேனல்கட்டி .
--- அற்புதமான கண்டுபிடிப்பு அணு . ஆபத்தான கண்டுபிடிப்பு அணுகுண்டு .
--- முப்பத்தைந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற ஒரே மனிதர் வால்ட் டிஸ்னிதான் .

No comments: