Friday, May 15, 2009

டார்வின்

சார்லஸ் டார்வின் .200 !
பிரபல விஞ்ஞானி டார்வினின் 200 வது பிறந்த நாள் பிப்ரவரி 12ம் நாள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் கொண்டாடப்படுகிறது .
இங்கிலாந்தில் உள்ள சிரீஸ்புரி என்ற இடத்தில் 1809ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி சார்லஸ் டார்வின் பிறந்தார் .இவரது தந்தை ராபர்டர் டார்வின் ஒரு டாக்டர் . பைனான்சிரியராகவும் இருந்து வந்தார் .பள்ளியில் படிக்கும் போது கோடைகாலங்களில் தந்தையின் சிறிய மருத்துவமனையில் பணியாற்றினார் .
தன் மகனையும் டாக்டராக்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார் . ஆனால் இயற்கை , கடல் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடவே டார்வின் விரும்பினார் .
அட்லாண்டிக் கடற்பகுதிகள் , தெற்கு அமெரிக்கா , ஆஸ்திரேலியா பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார் .
2 ஆண்டுகள் திட்டமிட்டபயணம் 5 ஆண்டுகள் வரை நீண்டது .கடல் ஓரத்தில் இருந்த நிலப்பகுதிகளில் 3 ஆண்டுகள் 3 மாதங்களும் , கடல் பகுதிகளில் 18 மாதங்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார் . அப்போது பெரிய பாலூட்டி ஒன்றின் மண்ணில் புதைந்திருந்த உடல்பாகங்களை கண்டுபிடித்து , அது குறித்து ஆராய்ச்சி செய்தார் . இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை 1859ம் ஆண்டு வெளியிட்டார் . இந்த புத்தகம் உலகின் உயிரின தோற்றம் குறித்த மிக முக்கியமான புத்தகமாக கருதப்படுகிறது . மனித இனம் குரங்கு இனத்துடன் தொடர்புடையது என்று இவர் கூறிய கருத்துக்கள் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது . எனினும் இப்போது அந்த கருத்துக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது . பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட டார்வின் தனது 73வது வயதில் 1882ம் ஆண்டு காலமானார் .--- தினமலர் . 12 -02 -2009 ..

No comments: