Wednesday, May 13, 2009

குளோனிங் எருமை கன்று !

உலகத்திலேயே முதன் முதலாக குளோனிங் முறையில் நம்.நாட்டில் உருவாக்கப்பட்ட எருமை கன்று பிறந்த ஒருவாரத்துக்குள் இறந்தது .
மிருகங்கள் , மனிதர்களின் உடல் பாகத்தில் இருந்து உயிரணுக்களை எடுத்து அறிவியல் முறையில் இன்னொரு மிருகம் அல்லது மனிதனை உருவாக்குவதற்கு குளோனிங் முறை என்று பெயர் .
இந்த ஆராய்ச்சியில் இப்போது மிருகங்கள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன .மனிதனை உருவாக்குவதற்கு எல்லா நாடுகளும் தடை விதித்துள்ளன .
நம் நாட்டில் குளோனிங் ஆராய்ச்சிகள் நடந்தன . அரியானா மாநிலம் கர்நாலில் உள்ள தேசிய பால் பண்ணை ஆராய்ச்சி மையத்தில் கால் நடை பயோ - டெக்னாலஜி பிரிவில் உள்ள சிங்லா , மாணிக் , சாகான் , பால்டா , ஷா , ஜார்ஜ் ஆகிய 6 விஞ்ஞானிகள் குளோனிங் எருமையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர் .
அரியானா உட்பட நம் நாட்டின் பல பகுதிகளில் வளர்க்கப்படும் அதிக பால் தரக்கூடிய முரா வகை எருமை வகையில் இருந்து மரபணுக்கள் எடுக்கப்பட்டு குளோனிங் எருமை உருவாக்கும் பணிகள் தொடங்கின . அவர்களின் ஆராய்ச்சி வெற்றிப்பாதையை நோக்கி நகர்ந்தது .குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பெண் எருமை கன்றுக்குட்டி பிப்ரவரி 6ம் தேதி பிறந்தது .
உலகில் முதன் முதலில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட இந்த கன்றுக்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம் ? என்பது குறித்து விஞ்ஞானிகள் திட்டமிட்டனர் .
ஆனால் , இந்த சாதனையின் வெற்றி பெரும் சோகத்தில் முடிந்தது . நேற்று முன்தினம் இரவு (12 -02 -2009 ) திடீரென குளோனிங் எருமை கன்று இறந்து விட்டது . பிறந்து ஒரு வாரத்துக்குள் இது இறந்தது விஞ்ஞானிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது .--- தினமலர் . 14 -02 -2009 .

No comments: