Monday, May 11, 2009

விபத்து !

விண்வெளி விபத்து !
விண்வெளியில் முதல் விபத்து .
விண்வெளியில் முதல் முறையாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது .
கடந்த செவ்வாய்க்கிழமை பூமியின் வளிமண்டலத்திலிருந்து 790 கிலோ மீட்டர் உயரத்தில் நடந்த அதுதான் உலகின் மிக உயரமான விபத்தாக இருக்கும் ! அமெரிக்காவின் வர்த்தகச் செயற்கைக்கோளான இரிடியமும் , ரஷ்யாகைவிட்ட ராணுவத் தகவல் செயற்கைக் கோளான காஸ்மோஸ் 2251 ம் வினாடிக்கு 11.7 கிலோ மீட்டர் வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன .
இந்த விபத்தால் இரண்டு செயற்கைக் கோள்களும் 600 -க்கும் மேற்பட்ட துகள்களாக உடைந்து சிதறி , கிட்டத்தட்ட 17,500 மைல் வேகத்தில் படுவேகமாக விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன . இந்த உடைந்த பாகங்கள் எந்த நேரமும் , உலகின் எந்தப் பகுதியிலும் விழலாம் என்கிற பயம்தான் அலர்ட் அறிவிப்பிற்கு காரணம் .
விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமாக கருதப்பட்ட செல்போன் முதல் , இன்டர்நெட் வரை இயங்குவதற்காக , ஒவ்வொரு நாடும் தங்கள் தேவைக்காக போட்டி போட்டுக் கொண்டு 12 ஆயிரம் செயற்கைக் கோள்கள் ' விண்வெளி குப்பை' கள் போல் பூமியைச் சுற்றிக்கொண்டுள்ளன .
அமெரிக்க நிறுவனமான இரிடியம் அனுப்பிய செயற்கைக் கோளுடன் ரஷ்யா செயற்கைக் கோள் மோதியதாக அமெரிக்காவின் நாசா அமைப்பு அறிவித்துள்ளது . ரஷ்யாவின் சைபீரியா பகுதி வானில் இரு செயற்கைக் கோள்களும் கடந்த செவ்வாய்க் கிழமை ( 10 - 02 -2009 ) பகல் 11 : 55 மணிக்கு சைபீரியாவுக்கு மேல் சுற்றியபோது , மிகக் கடுமையாக மோதியுள்ளன .
பூமியில் இருந்து 790 கி . மீ ; உயரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது .இரிடியம் நிறுவனம் செல்போன் சேவைக்களுக்காக இந்த செயற்கைக் கோளை கடந்த 1997ம் ஆண்டு அனுப்பியிருந்தது . இதன் எடை 560 கிலோ . 1993ம் ஆண்டு சென்ற ரஷ்ய செயற்கைக் கோளும் தொலைத்தொடர்பு சேவைக்கு பயன்பட்டது . எனினும் சில ஆண்டுகளாக இந்த செயற்கைக் கோள் கட்டுப்பாடின்றி விண்வெளியில் சுற்றியதாக தெரிகிறது . இதன் எடை ஆயிரம் கிலோ .
விண்வெளியில் இரு செயற்கைக் கோள்கள் மோதி விபத்துக்குள்ளாவது இதுதான் முதல்முறை .இந்த விபத்து காரண்மாக வெடித்து சிதறிய இவற்றின் உதிரி பாகங்கள் விண்வெளியில் மேகக் கூட்டம் போன்று சுற்றிவருகின்றன . இதனால் விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச ஆய்வு மையத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஜான்சன் விண்வெளி மைய நிபுணர் மார்க் மாட்னி கூறியுள்ளார் .இது போன்ற விபத்து நடக்கும் என்று நீண்ட காலமாகவே தான் எதிர்பார்த்ததாக அவர் தெரிவித்தார் .
ஆனால் , விண்வெளி மையத்துக்கும் அதில் உள்ள 3 வீரர்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நாசா அறிவித்துள்ளது விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து சர்வதேச விண்வெளி மையம் 435 கி.மீ ; தூரத்தில் நிலை கொண்டிருப்பதால் ஆபத்து எதுவும் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர் . தினமலர் . வெள்ளி , பிப்ரவரி 13 , 2009 .
--- தினமலர் ,வெள்ளி , பிப்ரவரி 13 ,2009 .
---- தினகரன் ,கோவை பதிப்பு , 13 -02 -2009 .
--- ஆனந்தவிகடன் . 04 - 03 - 2009 .

No comments: