Sunday, May 10, 2009

திருப்பனந்தாள் !

காமத்தால் விளையும் பாவம் !
மனிதருள் பலர் காமத்துக்கு அதிகம் இடம் தருகிறார்கள் .காமுகர்களிடம் நியாயம் என்பது இருக்க வாய்ப்பில்லை . மனைவியாக இருந்தாலும் கூடச் சிலநாட்கள் உறவுகொள்ளத் தகாதவை என்று நூல்களில் சொல்லப்பட்டு இருக்கிறது . ஐந்து , இரண்டு , ஏழு , எட்டு , ஆறாவது மற்றும் ஏகாதசி திதி நாட்கள் , திருவோணம் , ஆதிரை முதலான சில நட்சத்திரங்கள் , மாதப்பிறப்பு நாட்கள் , வியதிபாத நாட்கள் ஆகியவை உறவு கொள்ளக் கூடாத நாட்களாகும் . இந்த நாட்களில் மனைவியுடன் உறவு கொண்டால்கூட பாவம்தான் விளையும் என்பது புராணம் .
மாற்றான் மனைவியை விரும்புதல் , வேசியருடன் தொடர்பு கொள்ளுதல் , பேதைகளைப் புணர்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நரகமே நிச்சயம் .
பெருந்தவ முனிவரின் மனைவியை விழைந்தவன் படும்பாட்டைச் சொல்லவும் வேண்டுமா ? அகலிகையை விரும்பிய பழியும் விருத்திராசுரனைக் கொன்றதால் வந்த தோஷமும் நீங்க இந்திரன் திருப்பனந்தாளுக்கு வந்தான் . செஞ்சடையப்பரை வணங்கினான் . அகலிகையைத் தழுவியதால் விளைந்த பாவத்திலிருந்தும் , கொலைப்பழியிலிருந்தும் மீண்டான் என்கிறது திருப்பனந்தாள் புராணம் .
குருபத்தினியை விரும்புவது மாகா பாவம் . அந்தப் பழியிலிருந்து சந்திரன் சாபம் நீக்கம் அடைந்த தலம் திருப்பனந்தாள் . பக்திமலர் , 12 -02 -2009 .

No comments: