Friday, May 8, 2009

சிவராத்திரி !

5 வகையான சிவராத்திரி !
சிவராத்திரியை ஐந்து வகையாகப் பிரிப்பார்கள் .மாசி மாதத்தில் வருவது மகா சிவராத்திரி .
கிழமைகளில் திங்கள்கிழமை காலை முதல் 60 நாழிகை அமாவாசை அல்லது திங்கள் மாலை முதல் மறுநாள் காலை வரை தேய்பிறை சதுர்த்தசி இருப்பது யோக சிவராத்திரி . இதை வார சிவராத்திரி என்பார்கள் . திங்கள் இரவு நான்காம் காலத்தில் அரைநாழி தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அது யோக சிவராத்திரியாகவே சொல்லப்படும் . யோக சிவராத்திரி நாளில் விரதம் இருந்தால் மூன்று கோடி சிவராத்திரியை அனுஷ்டித்த பலன் உண்டு .
ஒரு வருடம் முழுமையும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி நாட்களில் வரும் இரவினை நித்திய சிவராத்திரி என்பார்கள் . தை மாதத்தில் தேய்பிறை பவுர்ணமி முதல் 13 நாட்கள் ஒரே ஒரு வேளை மட்டும் உணவினை உண்டு 14 ம் நாள் இரவு முழுமையாக கண் விழித்து உபவாசம் இருந்து நோன்பு நோற்பது பட்ச சிவராத்திரி எனப்படும் .
ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு திதிகளை ஒட்டி அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி மாதசிவராத்திரி .
மகாசிவராத்திரி நாளில் தரிசிக்க வேண்டிய சிவத்தலங்கள் பல உண்டு . அவற்றுள் முக்கியமான தலங்கள் நான்கு என்பார்கள் . திருக்கோகர்ணம் , ஸ்ரீசைலம் , காளஹஸ்தி , திருவைகாவூர் என்பவை அவை . தினமலர் ,பக்தி மலர் , 19 - 02 - 2009 .

No comments: