Tuesday, May 5, 2009

அப்படியா !

--- தந்தையின் நற்குணம் மலையைவிட உயரமானது . தாயின் நற்குணம் கடலைவிட ஆழமானது .
--- சோம்பேறி இரண்டு முட்கள் இல்லாத கடிகாரம் . அது நின்றாலும் , ஓடினாலும் உபயோகமில்லை .
---விலங்கினத்தில் யானைக்கு மட்டுமே 4 முழங்கால்கள் அமைந்துள்ளன . விலங்கினத்தில் யானையால் மட்டுமே குதிக்க முடியாது .
--- பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் ஒன்று , இரண்டு , மூன்று என தன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எண்ணிக்கை தெரியும் . இதற்கு உதாரணம் அடை காக்கும் கோழி , அடை காக்கும்
முட்டைகளில் ஒன்று குறைந்தால் கூட , கத்திக் கூச்சலிட்டு சுற்றி வந்து தேடுமாம் .
--- சிசிலி நாட்டில் உள்ள சன்க் என்ற இடத்தில் சேறும் சகதியும் நிறைந்த களிமண் ஏரி உள்ளது . இந்த ஏரியில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக விழுந்து குளிக்கின்றனர் . ஞாயிற்றுக்கிழமைகளில் சகதிக் குளியல் அமர்க்களப்படுமாம் . நிர்வாணக் கோலத்தில் இருக்கும் பெண்கள் உடம்பில் உள்ள களிமண்ணை யார் வேண்டுமானாலும் வழித்துவிடலாமாம் .
--- மீன் கொத்திப் பறவைகள் தாம் தின்ற மீன்களின் முட்களைக் கொண்டே கூடுகளை கட்டிக் கொள்ளூமாம் .
--- மனிதனுக்கு பக்கத்திற்கு 12 விலா எலும்புகள் தான் உள்ளன . ஆனால் , குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளனவாம் .
--- 98 நிமிடத்திற்கு ஒருமுறை ஆங்கில மொழியில் ஒரு புதிய வார்த்தை உருவாகிறதாம் . தற்போது ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை 9,99,844 . இது 29 - 4 - 2009 ல் பத்து லட்சம் வார்த்தைகள் கொண்ட மொழியாக ஆங்கிலம் திகழப் போகிறதாம் .
--- பெண்களை விட ஆண்களுக்கு இரு மடங்கு அதிகம் வியர்க்குமாம் .
--- போலந்திலுள்ள உஜாக்கோட்டை 17- ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது . இந்தக் கோட்டையின் நான்கு வாயிலகள் 4 பருவ காலங்களையும் , 12 மாடங்கள் 12 மாதங்களையும் , 52 அறைகள் ஆண்டுக்கு
52 வாரங்களையும் , 365 ஜன்னல்கள் 365 நாட்களையும் குறிக்கின்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாம் .
--- மக்னீஷியம் ஒரு வினோதமான உலோகம் . இது எரிந்த பிறகு அதன் சாம்பல் இந்த உலோகத்தை விட அதிக எடை உடையதாக இருக்கிறது .
--- குறைந்த நாளைக் கொண்ட கிரகம் வியாழன் . அங்கு 5 மணி நேரம் பகலாகவும் , 5 மணி நேரம் இரவாகவும் இருக்கும் . பாக்யா , பிப்ரவரி 13 -- 19 ; 2009

No comments: