Monday, May 4, 2009

காரணம் ! ஓரினம்...

தாய்தான் காரணம் !
ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கக் காரணம் தாய்தான் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள் . உண்மையில் பாலினத்தை ( gender ) நிர்ணயிப்பது தந்தைதான் . குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கும் ப்ளூபிரிண்ட் , பெற்றோர்களின் குரோமோசோம்களில் உள்ளது . பரம்பரைத் தன்மையைக் கொடுப்பது இந்த குரோமோசோம்கள்தான் . மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் நியூக்ளியஸில் 23 ஜோடிகள் குரோமோசோம்கள் இருக்கும் . இந்த 23 ஜோடிகளில் 22 ஜோடிகள் மனிதனின் நிறம் , உயரம் , வடிவம் , குணம் போன்றவற்றை நிர்ணயிக்கும் . 23 வது ஜோடிக்கு செக்ஸ் குரோமோசோம் என்று பெயர் . இந்த செக்ஸ் குரோமோசோம் ஆணிடம் XY ஆக இருக்கும் . பெண்ணிடம் X X ஆக இருக்கும் . அதாவது , ஆணின் உயிரணுக்களில் 50 சதவிகிதம் X குரோமோசோமும் , 50 சதவிகிதம் Y குரோமோசோமும் இருக்கும் . பெண்ணின் உயிரணுக்களில் X மட்டுமே இருக்கும் . கருவாகும்போது ஆணிடமிருக்கும் Y ஆனது பெண்ணின் X உடன் சேர்ந்தால் ஆண் குழந்தை உருவாகும் . ஆணிடமிருக்கும் X பெண்ணிடம் இருக்கும் X உடன் சேர்ந்தால் பெண் குழந்தை உருவாகும் . எனவே , ஒரு பெண்ணின் கருவில் உருவாக வேண்டியது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று நிர்ணயிக்கும் ஆற்றல் ஆணின் உயிரணுக்களில்தான் இருக்கிறது . எந்த குரோமோசோம் இணைய வேண்டும் என்பதை எந்த ஒரு ஆணும் தீர்மானிக்க முடியாது . எல்லாம் இயற்கையின் முடிவு .
--- டாக்டர் டி . நாராயண ரெட்டி , செக்ஸாலஜிஸ்ட் . ஆனந்தவிகடன் , 04 -02 - 2009 .
ஓரினம்...ஈருடல்...ஓருயிர் !
" உடலால் ஆணாகவும் மனதால் பெண்ணாகவும் உணர்வது ஓர் அரவாணிக்குரிய இயல்பு . இதனால் இவர்களது பாலியல் நாட்டம் சராசரி உணர்வுகளில் இருந்து மாறுபட்டு இருக்கும் . ஆனால் , உடலாலும் மனதாலும் முழுமையான ஆணாகவே இருந்தும் , இன்னொரு ஆண் மீது பாலியல் நாட்டம் கொள்கிறவர்கள்தான் ' ஹோமோசெக்ஸுவல்ஸ் '. அதுபோல உடலாலும் மனதாலும் பூரணமான பெண்ணாக இருந்து கொண்டே , இன்னொரு பெண் மீது பாலியல் நாட்டம் கொள்பவர்கள்தான் ' லெஸ்பியன்' கள் . இதுதான் அடிப்படை வித்தியாசம் --- பாரதி தம்பி . ஆனந்தவிகடன் , 04 - 02 - 2009 .

No comments: